×

திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

 

பெரியபாளையம், மே 6: ஆரணி பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆரணி பேரூர் திமுக சார்பில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் ஆரணி பேருந்து நிலையம் அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் முத்து தலைமை தாங்கினார்.

மாவட்ட பொருளாளர் ரமேஷ், முன்னாள் பேரூர் செயலாளர் கண்ணதாசன், ரோஸ் பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி பேரூர் பொருளாளர் கரிகாலன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே.கோவிந்தராஜன் கலந்து கொண்டு நீர், மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் பொதுமக்கள் மற்றும் அரசு பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு தர்பூசணி, இளநீர், நீர்மோர், வெள்ளரிக்காய், பழச்சாறு உள்ளிட்ட பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் திமுக நிர்வாகிகள் கோபிநாத், நிலவழகன், கலையரசி, முஸ்தபா, ஜெயக்குமார், தமிழழகன், ரவி, உதயகுமார், நாகராஜ், நீலகண்டன், சாய் சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : of Nemor Pandal ,DMK ,MLA ,Periyapalayam ,Neer Mor Pandal ,Arani Perur ,Tiruvallur East District ,Arani ,Perur ,
× RELATED திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் யானை...